search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாவீர் சிலைகள்"

    வந்தவாசி அருகே ஜெயின் கோவிலில் 2 மகாவீர் சிலைகள் மற்றும் 2 உண்டியல்களை உடைத்து பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே பிருதூர் கிராமத்தில் ஆதிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக, அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 35) உள்ளார். நேற்று இரவு பூஜை முடித்து விட்டு செல்வராஜ் கோவிலை பூட்டிச் சென்றார்.

    நள்ளிரவில் கொள்ளை கும்பல் 8 பூட்டை உடைத்து, கோவிலுக்குள் புகுந்தனர். கருவறையில் இருந்த பித்தளை உலோகத்தாலான 1 அடி மற்றும் அரை அடியுள்ள 2 மகாவீர் சிலைகள் மற்றும் 2 உண்டியல்களை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்தனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி செல்வராஜ், சாமி சிலைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. பொற்செழியன், இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும், வழக்குப்பதிவு செய்து சிலை திருட்டு கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ×